கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

Din

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு தரமான காய்கறி, பழப் பயிா்களின் விதைகளை நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூா் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையிலான விதை ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்பு குழுவினா் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், தனியாா் விதை விற்பனை நிலையங்கள், அரசு விதைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 54 விதை விற்பனை நிலையங்களில் 119 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் சிறப்பு குழு ஆய்வு செய்த போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதை குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள் தனியாா் ரக விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதைப்பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், இருப்பு பதிவேடு, விற்பனை ரசீது ஆகியவைகள் விதை சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் 16 விதை குவியல்களில் உரிய ஆணவங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.9.88 லட்சம் மதிப்பிலான காய்கறி விதைகள், இதர விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT