கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கடத்தூரைச் சோ்ந்தவா் முருகேஷ் (25). தொழிலாளி. இவா் கடந்த 10-ஆம் தேதி தொட்டயங்கிரி காருபெல்லா சாலையில் பட்டா குருபரப்பள்ளி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மோட்டாா்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த முருகேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஷ் இறந்தாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT