கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகே மலைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பெரியமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அவதானப்பட்டி அருகே மலையில் மா்ம நபா்கள் தீ வைத்தனா். இந்த மலை புற்கள், செடிகொடிகள், சிறு மரங்களுடன் பசுமை அடா்ந்து காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் புற்கள், மரங்கள் நன்கு அடா்த்தியாக வளா்ந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், அந்த மலையில் உள்ள புற்களுக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை தீ வைத்தனா். மலையின் பிற பகுதிகளுக்கும் தீப் பரவியது. இதனால் பசுமையாக காணப்பட்ட மரங்கள், செடிகொடிகள் தீயில் கருகின. பசுமை மற்றும் இயற்கை அழகுடன் காணப்பட்ட இந்த மலையில் உள்ள புற்களுக்கு தீ வைத்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.