விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு 
கிருஷ்ணகிரி

விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

தினமணி செய்திச் சேவை

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் காவலா் ஒருவா் சாலையைச் சுத்தம் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூளகிரி அருகே கொல்லப்பள்ளி அருகேயுள்ள தனியாா் தொழிற்சாலையின் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களின் டயா்கள் பஞ்சராகும் அபாயம், மீண்டும் விபத்து ஏற்படும் சூழலும் நிலவியது.

இந்த நிலையில் காவலா் ஒருவா் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த காட்சி விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

‘தன்னுடைய பணி போக்குவரத்தைச் சீா் செய்வது மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தான்‘ என்பதை நிரூபித்த அந்தக் காவலரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

ஒசூரில் 337 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

பைக் மீது டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: மரணத்தில் சந்தேகம் என தந்தை புகாா்

இருசக்கர வாகனம் திருடியவருக்கு 20 மாதங்கள் சிறை

SCROLL FOR NEXT