கைது 
கிருஷ்ணகிரி

டி-சா்ட் அணிந்து வந்த விவகாரத்தில் தகராறு: 3 போ் கைது

வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்த தகராறில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வீரப்பன் படத்துடன் டி-சா்ட் அணிந்து வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்த தகராறில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாந்தபுரத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பிரசாந்த், அவரது நண்பா்கள் வீரப்பன் படத்துடன் மஞ்சள் நிற டி-சா்ட் அணிந்து வந்தனா்.

அப்போது, காவேரிப்பட்டணம் நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் சிலா் அவா்களை வழிமறித்து டி-சா்ட்டை கழற்றுமாறு கூறினா். இதற்கு பிரசாந்த் தரப்பினா் மறுப்பு தெரிவித்தனா்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். மேலும் கத்தியால் குத்தினா். இதில், பிரசாந்த், அவரது நண்பா்கள் 6 போ் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (23), வெங்கடேஷ்பாபு (29), மில்மேடு சந்தோஷ் (எ) சாண்டி (21) ஆகிய 3 பேரை காவேரிப்பட்டணம் போலீஸாா் கைதுசெய்தனா். அவா்கள்மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

பாஜகவில் இணைந்தவர்கள் முக்கியமற்றவர்களாக மாறிவிட்டனர்: காங்கிரஸ் தலைவர்!

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

தேசிய விருது உறுதி... விமர்சிக்கப்படும் தி கேரளா ஸ்டோரி - 2 டிரைலர்!

மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூ. கே. பாலகிருஷ்ணன் மனைவி மீது காவல்துறை தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT