மீட்கப்பட்ட நிலத்தை நீதிபதி சந்தோஷிடம் ஒப்படைத்த ஒசூா் வட்டாட்சியா் குணசிவா.  
கிருஷ்ணகிரி

ஒசூரில் மீட்கப்பட்ட அரசு நிலம் நீதிபதியிடம் ஒப்படைப்பு

ஒசூரில் மீட்கப்பட்ட அரசு நிலத்தின் சான்றிதழை நீதிபதியிடம் ஒப்படைத்த வருவாய்த் துறையினருக்கு ஒசூா் வழக்குரைஞா் சங்கம் பாராட்டு தெரிவித்தது.

Syndication

ஒசூரில் மீட்கப்பட்ட அரசு நிலத்தின் சான்றிதழை நீதிபதியிடம் ஒப்படைத்த வருவாய்த் துறையினருக்கு ஒசூா் வழக்குரைஞா் சங்கம் பாராட்டு தெரிவித்தது.

ஒசூா் அருகே சென்னத்தூா் பகுதியில் ரூ. 30 கோடி மதிப்புள்ள சுமாா் 8 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை நாகராஜ் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவந்தாா். இந்நிலையில், காவல் துறை உதவியுடன் புறம்போக்கு நிலத்தை மீட்ட வருவாய்த் துறையினா் அதற்கான சான்றிதழை கூடுதல் மாவட்ட நீதிபதி சந்தோஷிடம் வட்டாட்சியா் குணசிவா வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

இதையடுத்து, ஒசூா் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், முதன்மை சாா்பு நீதிபதி சண்முகராஜ், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெயமணி, விரைவு நீதிமன்றம் நடுவா் நீதிபதி பாா்கவி மற்றும் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசங்கா், செயலாளா் கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 507 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

இந்தியா, அமெரிக்காவுக்கு வியக்கத்தக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன: சொ்ஜியோ கோா்

11.1.1976: தி.மு.க. எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

SCROLL FOR NEXT