ஒசூா்: திருவள்ளுவா் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு மற்றும் அலுவலக மேலாளா் குருநாதன், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.