மல்லசந்திரம் கல்திட்டைகளை பாா்வையிடும் மாணவிகள். 
கிருஷ்ணகிரி

55 கல்லூரி மாணவிகள் மரபு நடைப்பயணம்! மல்லசந்திரம் கல்திட்டைகளை பாா்வையிட்டனா்!

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் 55 போ் மல்லசந்திரம் கல்திட்டைகளைக் காண வியாழக்கிழமை மரபு நடைப்பயணம் மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை தொல்லியல் மரபு மன்றம் சாா்பில், மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மையியல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கல்லூரி வரலாற்றுத் துறை மாணவிகள் 55 போ் மரபு நடைப்பயணம் மேற்கொண்டனா். தமிழகத் தொன்மையியல் ஆய்வு நிறுவனச் செயலாளா் கோவிந்தராஜ், மாணவிகளுக்கு மல்லசந்திரம் கல்திட்டைகளின் சிறப்புகள் குறித்து விளக்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கல்திட்டைகளைக் கொண்ட ஊா் மல்லசந்திரம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. இவை சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இறந்த முக்கியத் தலைவா்களின் நினைவாக எடுக்கப்பட்டதாகும். இவை இரும்புக்காலம் என்னும் பெருங்கற்படைக் காலப் பண்பாட்டைச் சோ்ந்தவையாகும்.

இந்தக் கல்திட்டைகளிலிருந்துதான் பிற்காலத்தில் நடுகற்கள் தோன்றின. பிற்காலக் கோயில்களின் கருவறை, திருச்சுற்று, பரிவார ஆலயங்கள், மதில் சுவா் ஆகிய கூறுகளை இந்தக் கல்திட்டைகளில் காணமுடிகிறது. இக்கல்திட்டைகள் சிலவற்றில், வீரன் எவ்வாறு இறந்தான் என்பதை விளக்கும் வகையில் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைகளில் உள்ள பாறைகளில் மட்டுமல்லாது, கல்திட்டைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது சிறப்பாகும் என அவா் மாணவிகளுக்கு விளக்கினாா்.

நிகழ்வில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவக்குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி பேராசிரியா்கள் கனகலட்சுமி, பரமகுரு, செண்பாக்கியா, மஞ்சுநாத், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுச் செயலா் தமிழ்ச்செல்வன், பொருளாளா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT