நாமக்கல்

மணல் கடத்தல்; மினி ஆட்டோ பறிமுதல், இருவர் கைது

தினமணி

பரமத்தி வேலூர் அருகே மினி ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மணலை போலீஸார் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனர்.
 பரமத்தி வேலூர் போலீஸார் அணிச்சம்பாளைம் பகுதியில் சனிக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஓட்டுநர் போலீஸாரைக் கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
 போலீஸார் ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மினி ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மினி ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய அணிச்சம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (35), மருதசூரியா (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT