முகப்பு
நாமக்கல்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்கவேண்டும். 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
அரசு போக்குவரத்துக் கழக நாமக்கல் கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். எல்பிஎப் சங்கச் செயலர் முருகேசன், பிரகாசம், பணியாளர் சங்கச் செயலர் சேகர் முன்னிலை வகித்தனர். எல்பிஎப் மத்திய சங்க துணைச் செயலர் தனபால் நன்றி கூறினார்.
திருச்செங்கோட்டில்...
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நெய்க்காரப்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →