நாமக்கல்

நாமக்கல்: தாத்தா கொலை; பேரன் கைது

தினமணி

குடிபோதையில் தாத்தாவைக் கொலை செய்த பேரனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை (75). அவரது மகன் சுப்ரமணியன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். மருமகள் சீதா (45), பேரன் மணிராஜா (20) ஆகியோருடன் அய்யாதுரை வாழ்ந்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள மணிராஜா திங்கள்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு தாயார் சீதா, உணவு பரிமாறியுள்ளார். அப்போது குழம்பு சரியில்லை எனக் கூறி தாயிடம் தகராறு செய்துள்ளார்.
 அப்போது அய்யாதுரை பேரனைத் தட்டிக் கேட்டாராம். அதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த மணிராஜா, தனது தாத்தாவை தள்ளி விட்டுள்ளார். இதில் கீழே விழுந்த அய்யாதுரைக்கு தலையில் அடிபட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT