முகப்பு
நாமக்கல்

திமுக பொதுக் கூட்டம்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் இளைஞர்களின் எழுச்சி நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் இளைஞர்களின் எழுச்சி நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
 நாமக்கல் மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
 கபிலர் மலை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொதுக் கூட்டத்தில் கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி உமாபதி, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். கபிலர்மலை ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் சம்பத் நன்றி கூறினார்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →