நாமக்கல்

கபிலர்மலை அருகே குடிசை வீட்டில் தீ; பொருள்கள் சேதம்

DIN

கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையத்தில் கூலித் தொழிலாளி வீட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.
சிறுகிணத்துப்பாளையத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (60). இவர், கூலி வேலை செய்து வருகிறார். இவர், சனிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயன்றனர். தீ அதிகமாக பரவியதையடுத்து கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT