ராசிபுரம் விழியன்குல கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளையின் 2018-23-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக ஆத்தூர் மணிவிழுந்தான் காலனி இ.பழனிவேல், துணைத் தலைவராக தருமபுரி கே.வடிவேல், செயலாளராக ஆர்.கவுண்டம்பாளையம் கே.ஏ.பிரபாகரன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அத்தனூர் அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனர். இவர்களை அறக்கட்டளை உறுப்பினர்கள், பிற நிர்வாகிகள் பாராட்டினர்.