தீவிர மாணவர் சேர்க்கை முகாம் ஊர்வலம்
திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் சார்பில் திங்கள்கிழமை தீவிர மாணவர் சேர்க்கைக்கான ஊர்வலம் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் சார்பில் திங்கள்கிழமை தீவிர மாணவர் சேர்க்கைக்கான ஊர்வலம் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாகிதாபானு தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கலா, சடையப்பன் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின்போது 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பற்றிய விவரங்கள்சேகரிக்கப்பட்டன.
பள்ளியின் கற்பித்தல் முறை, மாணவர்களுக்கு அரசு தரும் உதவிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க கேட்டுக் கொண்டனர். வரும் வாரங்களில் பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தி அரசுப் பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க தீவிர மாணவர் சேர்க்கைமுகாமைத் துவக்கினர்.