முகப்பு
நாமக்கல்

பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு 

பரமத்தி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:41 am IST
பகிர்:

பரமத்தி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
 நாமக்கல் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் உதவி திட்ட அலுவலர் சரவணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குடியிருப்புகளிலும் 6 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை குடியிருப்பு வாரியாக கண்டறியும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இக் கணக்கெடுப்புப் பணியை பரமத்தி வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருள்புனிதன் தொடக்கி வைத்தார்.
 பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 பரமத்தி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தமிழ்ச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் புவனேஸ்வரி,பஞ்சவர்ணம்,நிர்மலாதேவி,அனிதாகுமாரி, குமுதா மற்றும் சிறப்பாசிரியர்கள் முரளிதரன், பெரியசாமி ஆகியோர் கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.