முகப்பு
நாமக்கல்

கைலாசநாதர் கோயில் பாதையில் சாலைத் தடுப்புகள்

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதசாரிகள், ஓங்காளியம்மன் கோயிலிலிருந்து அண்ணா சிலை வரை வைத்துள்ள

Updated On : 9 ஜூலை, 2018 at 8:40 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதசாரிகள், ஓங்காளியம்மன் கோயிலிலிருந்து அண்ணா சிலை வரை வைத்துள்ள சாலை தடுப்புகளைச் சுற்றிக் கோயிலுக்குச் செல்ல வேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஈரோடு சாலை, ஆனங்கூர் சாலை வழியாக வரும் பொதுமக்கள் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அந்த வீதி வழியாக நேராக உள்ள பிரதான சாலையை கடந்து கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். தற்போது  ஆஞ்சநேயர் கோயில் வீதிக்கும்,கைலாசநாதர் கோயிலுக்கும் செல்லும் தெற்கு மாட வீதிக்கும் இடையில் உள்ள பிரதான சாலையில் சாலை தடுப்புகள் போக்குவரத்து காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் தாங்கள் அழைத்து வரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சாலையைச் சுற்றி அண்ணா சிலை பகுதியைத் தாண்டி செல்ல வேண்டி இருப்பது சிரமமாக உள்ளது. ஆகவே, பாதசாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.