86 தலைமைக் காவலர்கள் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பத்து ஆண்டுகள் பணி முடித்த 86 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தனிப் பிரிவு காவலர் முருகேசன், காவலர்கள் ஆனந்தகுமார், சந்திரசேகர், மணிவேல், ராஜா உள்ளிட்ட 11 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் ராசிபுரம் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 7 தலைமைக் காவலர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 86 தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளதால், இவர்களில் சிலருக்கு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாறுதல் அளிக்கப்பட உள்ளன.