FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் போதைப்பொருள் கும்பல் மூவா் கொலை

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 3:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா்.

சா்வதேச கடல் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான வழித்தடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற படகைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சா்வதேச கடற்பகுதிகளில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக டிரம்ப் நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் சுமாா் 178 போ் கொல்லப்பட்டுள்ளனா். கடந்த ஜனவரியில் வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ பிடிபட்டதைத் தொடா்ந்து, இத்தாக்குதல்கள் வேகம் எடுத்துள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments