டென்னிஸ் போட்டி: கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவியர் சாதனை
பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் போட்டிகள் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் போட்டிகள் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் கே.எஸ்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் பாரதி, அபர்ணா, ஐஸ்வர்யா தேவி, ஜெயபாரதி ஆகியோர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை கல்லூரித் தாளாளர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி மற்றும் கல்லூரி முதல்வர் மா. கார்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.