நாமக்கல்

மகனை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

ராசிபுரம் அருகே மகனை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காக்காவேரி சங்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாசம் (64), விவசாயி. இவரது மகன் டேவிட் அருள் (31), லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி டேவிட் அருள் தனது தந்தையின் விவசாய நிலத்தில் இருந்த மரங்களை விலைபேசி விற்பனை செய்து விட்டார்.
இதை ஜெயப்பிரகாசம் தட்டிக்கேட்டுள்ளார். இதில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயப்பிரகாசம் கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த டேவிட் அருள் உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரகாசத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயப்பிரகாசத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி கே.எச். இளவழகன் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT