நாமக்கல்

சரக்கு ஆட்டோ மோதியதில் தொழிலாளி சாவு

DIN

பரமத்திவேலூர் அருகே அனிச்சம்பாளையத்தில் மினி ஆட்டோவின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
அனிச்சம்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பாஸ்கர் (45) கூலித் தொழிலாளி. இவர், வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ஆட்டோ ஒன்றின் பின்னால் அமர்ந்து நன்செய் இடையாறிலிருந்து அனிச்சம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற  மற்றொரு சரக்கு ஆட்டோவின் ஓட்டுநர் திடிரென  தனது ஆட்டோவை நிறுத்த பின்னால் இவர் வந்த சரக்கு ஆட்டோவின் ஓட்டுநரும் ஆட்டோவை நிறுத்தி உள்ளார்.
இதனால் ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த பாஸ்கர் கீழே இறங்கி உள்ளார்.
அது தெரியாமல் சரக்கு ஆட்டோவை ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்தி உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக பாஸ்கர் மீது மினி ஆட்டோ ஏறியுள்ளது.
இதில் படுகாயமடைந்த பாஸ்கரை அப்பகுதியினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே  பாஸ்கர்
உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அனிச்சம்பாளையம்புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷை (23) கைது செய்து ஆட்டோவை
பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT