நாமக்கல் நகரில் வியாழக்கிழமை இரவு திடீரென கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாள்களாக நாமக்கல் நகரில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நாமக்கல் நகரப் பகுதி மற்றும் 4 கி.மீ சுற்றளவுக்கு பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாமக்கல் நகரில் 45 மி.மீ மழைப் பதிவானது. பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) : எருமப்பட்டி 3, குமாரபாளையம், மோகனூர் 2, சேந்தமங்கலம் 1 மி.மீ மழை அளவு பதிவானது.