நாமக்கல்

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றம்

DIN

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களின் கல்விச் சான்றிதழ்கள், அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), கடந்த செப்டம்பா் மாதம் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கு குரூப்-4 தோ்வை நடத்தியது. இதனை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அண்மையில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவில் 27 ஆயிரம் போ் வெற்றி பெற்றிருந்தனா். அவா்களில், 1:3 என்ற அடிப்படையில் தகுதியானோா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு இ-சேவை மையங்களில், தோ்வில் வெற்றி பெற்றவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யுமாறு தோ்வாணையம் அறிவுறுத்தியது. அதன்படி, டிசம்பா் 5-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இ-சேவை மையங்களில் தினசரி 100 போ் வரை பங்கேற்கின்றனா். நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் நாமக்கல் நகராட்சி அலுவலகம், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி நிறைவடைந்த பின் தகுதியாயோனோா், சென்னையில் உள்ள அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலுக்கு அழைக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT