நாமக்கல்

ஆசிரியர் பணியிடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

DIN

அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பார்த்தீபன். இவர் அண்மையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
 இந்த நிலையில், பார்த்தீபன் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இவருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
 இதையறிந்து, மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் நுழைவு வாயில் முன்பாக தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியர் பார்த்தீபனை பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.
 தகவலின்பேரில் கல்வித் துறையினரும், காவல் துறையினரும் விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT