நாமக்கல்

6 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

DIN

நாமக்கல்லில் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சோதனையில்,  பேக்கரியில் இருந்து 6 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 14 வகையான நெகிழி பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  இந்தத் தடையை மீறி நாமக்கல் நகரில் சில கடைகளில் நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர்(பொறுப்பு) கமலநாதனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து,  அவரது உத்தரவின்பேரில் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கடைகளில்  பேரில் சுகாதார அலுவலர் பேச்சிமுத்து,  ஆய்வாளர்கள் உதயகுமார், செல்வராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
ஆய்வின்போது செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் இருந்து தடை செய்யப்பட்ட 6 கிலோ நெகிழி பைகள்  பறிமுதல்  செய்யப்பட்டன.  இதையடுத்து கடையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல்,  தள்ளுவண்டிகளில் நெகிழி பைகளுடன் வியாபாரம் செய்த 2 பேருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT