நாமக்கல்

கால்நடைத் துறை ஊழியர் தீயில் கருகி சாவு

DIN

கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த கொசுவர்த்தி சுருளில் இருந்த தீ கட்டிலில் இருந்த மெத்தை மீது பரவியதில் அதில் உறங்கிக் கொண்டிருந்த கால்நடைத் துறை ஊழியர் தீயில் கருகி உயிரிழந்தார். 
நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (57).  இவர் அணியாபுரம் கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.  இவர் மதுப்பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு கயிற்று கட்டிலில் மெத்தை விரித்து படுத்த கிருஷ்ணமூர்த்தி,  கட்டிலுக்கு அடியில் கொசுவர்த்தி சுருளை எரியவிட்டு இருந்தார்.  அதில் இருந்து வெளியான தீ மெத்தையில் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.  இதில் கிருஷ்ணமூர்த்தி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில்,  நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT