நாமக்கல்

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாமக்கல் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.ரவி தலைமை வகித்தார்.  பொருளாளர் எ.பாஸ்கர் முன்னிலை வகித்தார்.  செயலர் எம்.பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திர பிரசாத்,  துணைத் தலைவர் இளவேந்தன் உள்ளிட்டோர் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு அளிக்கும்  முடிவை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். 
இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி உடனடியாக வாரிசுப் பணி வழங்க வேண்டும்.  இருசக்கர வாகன கடன் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.  சங்க மாவட்ட துணைத் தலைவர் வேலு நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT