நாமக்கல்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

DIN

பட்டறைமேடு  ஹைட்ராலிக் பட்டறையில் மின் வயரை காலில் மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருச்செங்கோடு எட்டிமடைபுதூரைச் சேர்ந்தவர் மதியழகன் (36).  இவர் சங்ககிரி ரோடு பட்டறை மேட்டில் உள்ள ஒரு ஹைட்ராலிக் பட்டறையில் வேலை செய்து வந்தார்.   இரவு மழை பெய்து கொண்டிருந்த போது,  கழிப்பறைக்குச் சென்ற அவர்,  வெறுங்காலுடன் நடந்து வந்து  தரையில் கிடந்த மின்கம்பியை மிதித்ததாகக் கூறப்படுகிறது. 
இதனால் மின்சாரம் உடலில் பாய்ந்து கீழே விழுந்தார்.  அருகிலிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு சென்றனர்.  அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  
இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து மதியழகனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மதியழகனுக்கு பானுமதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT