நாமக்கல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

DIN

ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
 இக் கூட்டத்தில் நகரச் செயலாளர் வீர.ஆதவன் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வி.அரசன், மாவட்ட துணைச்செயலர் ஆ.நீலவானத்துநிலவன், தொகுதி செயலர்கள் பெ.செங்குட்டுவன், கோவி.பணரோசா, த.ஆற்றலரசு, துணைச்செயலர் ந.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலர் வெ.கனியமுதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன், மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பாச்சல் ஏ.சீனிவாசன், இந்தியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் ஒய்.முகமதுமுபின், திராவிடர் கழக மாவட்டச் செயலர் வை.பெரியசாமி, ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலர் வை.பெரியசாமி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT