நாமக்கல்

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல்

DIN

பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலூர் காவிரி பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.40 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண்,வணிகம்) செங்கோடன் தலைமையிலான பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுவினர் வேலூர் காவிரி பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் கரூர் மாவட்டம், அரியாக்காரன்பாளையத்தைச் சேர்ந்த மருதுபாண்டி (23) என்பதும்,  தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. அதன்படி மருதுபாண்டியிடம் இருந்து ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத்தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரான தேவிகாராணியிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT