நாமக்கல்

காவலர்களை தாக்கியதாக இருவர் கைது

DIN

ராசிபுரம் அருகே ஆயில்பட்டி பகுதியில் காவலர்களைத் தாக்கியதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆயில்பட்டி உடையார்பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சத்யா. குடும்ப பிரச்னை காரணமாக ஆயில்பட்டி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் கூறியதையடுத்து, காவல் நிலைய எழுத்தர் செல்வராஜூ, காவலர் பிரபாகரன் ஆகியோர் விசாரணை நடத்த சம்பவ இடம் சென்றனர். அப்போது அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த கார்கூடல்பட்டியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக நடத்துநர் சுரேஷ் (35), பெருமாள் (49) ஆகியோர் காவலர்களைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT