நாமக்கல்

காவல் ஆய்வாளர் வாகனம் மோதியதில் கல்லூரி ஆசிரியர் படுகாயம்

DIN


நாமக்கல்லில் காவல் ஆய்வாளர் வாகனம் மோதியதில் தனியார் கல்லூரி ஆசிரியர்  படுகாயமடைந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலுôரைச் சேர்ந்தவர் ஆனந்த் (27). கல்லூரி ஆசிரியர். இவர் நாமக்கல் - மோகனுôர் சாலையில் உள்ள  திருநகரில் வசித்து வருகிறார். சனிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் பாரத ஸ்டேட் வங்கி வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி, தனது வாகனத்தில் வந்துள்ளார். அந்த வாகனத்தை ஓட்டுநர் வெங்கடாசலம் (35) ஓட்டி வந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக, இருசக்கர வாகனம் மீது காவல் ஆய்வாளரின் வாகனம் மோதியது. இதில், கல்லூரி ஆசிரியர் ஆனந்த் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT