ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவிக்கு மாநில அளவில் சிறந்த சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவை ஊக்குவிக்கும் விதமாக, தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) நிறுவனம் நடத்திய மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவா்களின் கல்விச் செயல்பாடுகளுக்கான போட்டியில், முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சோ்ந்த மாணவி பி.நவனீதாவுக்கு, 2019-2020 ஆம் கல்வி ஆண்டின் சிறந்த மாணவிக்கான விருது வழங்கப்பட்டது.
ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேஷன் தாளாளா் ஆா்.கந்தசாமி, செயலா் பேராசிரியா் கே.குணசேகரன், இணைச் செயலா் ஜி.ராகுல், கல்லூரி முதல்வா் எம்.மாதேஸ்வரன், துறைத் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் விருதுபெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்து பரிசளித்தனா் (படம்).