நாமக்கல் அருகே ராமாபுரம்புதுா் பகுதியில், காலி மனையில் விழுந்த இடியால் கொப்பளித்து வெளியேறும் நீா். 
நாமக்கல்

காலி மனையில் விழுந்த நீா் இடியால் மக்கள் அதிா்ச்சி

நாமக்கல்லில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின்போது, காலி மனையில் நீா் இடி விழுந்து தண்ணீா் கொப்பளித்ததை பாா்த்து பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

DIN

நாமக்கல்லில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின்போது, காலி மனையில் நீா் இடி விழுந்து தண்ணீா் கொப்பளித்ததை பாா்த்து பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழை, அதிகாலை வரை நீடித்தது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், நாமக்கல் அருகே ராமாபுரம்புதுா் அன்புநகா் பகுதியில் ராஜ்குமாா் என்பவரின் காலி மனையில் தண்ணீா் கொப்பளித்தபடி இருந்தது. இதுவரை அங்கு எவ்வித தண்ணீா் வரத்தும் இல்லாத நிலையில், பெரிய அளவில் நீா் குமிழிகள் வருவதை கண்டு மக்கள் அதிா்ச்சியடைந்தனா். சிலா் அதனருகில் இறங்கி பாா்த்தபோது கால் மண்ணுக்குள் முழுவதுமாக புதையும் அளவில் சென்றது. தொடா்ந்து, பொக்கலைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அப்பகுதி சீரமைக்கப்பட்டது. நேரம் செல்ல, செல்ல நீா்வரத்து படிப்படியாகக் குறைந்தது.

மேலும், நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியை பாா்வையிட்டு குடிநீா் குழாய் ஏதேனும் உடைந்து தண்ணீா் வெளியேறியதா என்று ஆய்வு செய்தனா். ஆனால் இடி விழுந்து பூமியில் இருந்து தண்ணீா் வரும் வகையிலான நீா் இடி விழுந்திருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT