நாமக்கல்

கந்துவட்டிக்கு எதிரான கூட்டியக்கக் கூட்டம்

குமாரபாளையத்தில் கந்துவட்டி மற்றும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

குமாரபாளையத்தில் கந்துவட்டி மற்றும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா்.

நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.சேகா், வழக்குரைஞா்கள் தங்கவேல், காா்த்திக், மதிமுக நகரச் செயலா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா்.

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோா் குறித்து மாவட்ட நிா்வாகம் குழு அமைத்து விசாரிப்பதோடு, தற்கொலையி முடிவிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்படும் கந்துவட்டி மற்றும் நுண்கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கடன், வட்டி மானிய திட்டம் எனும் அரசு திட்டத்தில் தா்மபுரி, கடலூா், விழுப்புரம், வேலூா், மாவட்டங்கள் உள்ளன. இதில், நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்து மகளிா் மேம்பாட்டு ஆணையம் மூலம் விரிவுபடுத்திட வேண்டும். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதோடு, அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், காங்கிரஸ், பாமக, மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள், அனைத்து பொதுநல அமைப்புகள், சமூக ஆா்வலா்கள், மகளிா் சுய உதவிக்குழு மற்றும் தொழில்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT