நாமக்கல்

காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட  4 பேர் மீட்பு

பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரை தீயணைப்பு வீரர்கள்

DIN

பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக  மீட்டனர்.
கரூர் மாவட்டம்,வேலாயுதம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (65). இவர் தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு காவிரியாற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது, அடித்துச் செல்லப்பட்ட இவரை மின்னாம்பள்ளி அருகே உள்ள கொண்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த முருகேசன் மகன் தேவா (21), அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் நக்கீரன் (19), நாமக்கல் புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சூர்யபிரகாஷ் (19) ஆகிய மூன்று மீட்க முயற்சித்தனர்.
ஆனால், இவர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் முதியவர் உள்பட நால்வரையும் பத்திரமாக மீட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT