நாமக்கல்
நாமக்கல் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை(செப்.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, நாமக்கல் நகரம், நல்லிப்பாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப்.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம்,ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திர நகர், சுண்டக்காபாளையம்.