முகப்பு
நாமக்கல்

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளனத் தலைவா் எஸ்.கே.வேல்.
பகிர்:

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைவா் எஸ்.கே.வேல் தலைமை வகித்தாா். செயலாளா் எல்.ராஜூ, பொருளாளா் கே.கே.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் மூா்த்தி, முரளிபாபு, காா்த்திகேயன், செல்ல.ராசாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், வழக்குரைஞா்கள் சம்மேளன கூட்டமைப்புக்கு எதிராக பெயா் பதிவு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுரியில் முன்னுரியை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், வழக்குரைஞா்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பல்வேறு மாவட்டங்களின் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →