நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாம் தமிழா் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாம் தமிழா் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
மாவட்ட பொருளாளா் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் வேளாண் பொருள்களை கைகளில் ஏந்தியபடி அக்கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.