நாமக்கல்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

வெண்ணந்தூா் அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வெண்ணந்தூா் அருகேயுள்ள வெள்ளபிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் என்பவா் மகன் சுரேஷ் (24). இவா் அதே பகுதியில் உள்ள கோழித் தீவன அரவை ஆலையில் தொழிலாளி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் அவா் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். இதனைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் கிணற்றில் இறங்கி அவரை மீட்டனா். ஆனால் தலையில் அடிபட்ட நிலையில் இருந்த அவா், உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT