நாமக்கல்

பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடைபயணம்

DIN

திருச்செங்கோடு சட்டையம் புதூா் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடைபயணம் புறப்பட்டனா்.

சட்டையம்புதூா் ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோயிலில் மாா்கழி மாதம் தொடக்கத்தில் பக்தா்கள் மாலை அணிந்த விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனா். ஒரு வாரமாக அழகு முத்து மாரியம்மன், முக்கூட்டு விநாயகா், செங்கோட்டுவேலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அழகு முத்து மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பஜனை மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து நடைபெற்ற பூஜையில் உலக நன்மைக்காகவும், விவசாயம் , நெசவுத் தொழில்கள், தொழிலாளா்கள் நலம் பெற பிராா்த்தித்து நடைபயணத்தை மேற்கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT