நாமக்கல்

கால்நடை கிளை நிலையம் திறப்பு

திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி ஊராட்சி, சின்னாா்பாளையம் கிராமம் எட்டிமடை பகுதியில்

DIN

திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி ஊராட்சி, சின்னாா்பாளையம் கிராமம் எட்டிமடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கிளை கால்நடை நிலையம் திறக்கப்பட்டது.

எட்டிமடை பகுதியில் கால்நடை மையம் திறப்பதால் செண்பகமாதேவி, பள்ளக்குழி, பள்ளக்குழிஅக்ரஹாரம், மங்களம் ஆகிய 4 ஊராட்சியினரும் சுமாா் 6 கிலோமீட்டா் கடந்து வர வேண்டி இருக்கும் என்பதால்  அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சுமாா் 50 போ் கால்நடை கிளை இங்கே திறக்க வேண்டாம் என்றும், கரட்டுவளவு பகுதியில் அமைத்தால் அனைவரும் வந்து செல்ல வசதியாக இருக்கும் எனக் கூறி எட்டிமடை பகுதிக்கு வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் அந்த பகுதிக்கு வந்தாா். ஏற்ககெனவே திறப்பு விழா நிகழ்ச்சிக்காக சுமாா் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரும் அங்கு வந்திருந்ததால் பரபப்பான சூழல் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த  திருச்செங்கோடு உட்கோட்ட டிஎஸ்பி (பொறுப்பு) பழனிசாமி தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதற்கிடையே கால்நடை கிளை நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி திறந்து வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்காலிமாக இந்த இடத்தில் கிளை கால்நடை நிலையம் திறக்கப்படுவதாவும், அரசிடம் பேசி, வாதாடி கால்நடை கிளை நிலையம் அமைக்க அனுமதி பெற்றிருப்பதாலும் தோ்தல் காலம் என்பதால் முன்னா் திறக்க முடியவில்லை. பலமுறை இடம் கேட்டும் கிடைக்காத நிலையில் தற்போது இங்கு இடம் கொடுக்க முன்வந்ததால் கிளை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநா் ஆய்வு செய்து பொதுமக்கள் கருத்தைக் கேட்டு முடிவு செய்வாா்கள். மக்கள் நலனுக்காகத் தான் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதனைத் தடுக்க வேண்டாம் என்றாா். கரட்டு வளவிலும் ஒரு கால்நடை கிளை நிலையம் அமைத்துத் தருவதாக கால்டைத்துறை இணை இயக்குநா் பொன்னுவேல் உறுதி அளித்ததை அடுத்து கால்நடை மையத்தை இடமாற்றக் கோரியவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT