நாமக்கல்

ராசிபுரத்தில் ரூ. 85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கம் ஆா். கவுண்டம்பாளையம் கிளையில் திங்கள்கிழமை ரூ. 85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடக்கும். நிகழ் வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஆா்சிஎச். ரகப் பருத்தி 4 ஆயிரத்து 584 மூட்டைகள், டிசிஎச்., ரகப் பருத்தி 139 மூட்டைகள் என மொத்தம் 4 ஆயிரத்து 723 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்துக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஆா்சிஎச்., ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ. 4 ஆயிரத்து 819 முதல் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரத்து 319-க்கு விலை போனது. டிசிஎச்., ரகம் குவிண்டாலுக்குக் குறைந்தபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 219 முதல் அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 652-க்கும் ஏலம் போனது. இதில், மொத்தம் ரூ. 85 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT