முகப்பு
நாமக்கல்

நாமக்கல்: 60 சதவீத பயணிகளுடன் 120 அரசு பேருந்துகள் இயக்கம்

கரோனா பொது முடக்கம் தளர்வால், நாமக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 60 சதவீத  பயணிகளுடன் திங்கள்கிழமை 120 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

கரோனா பொது முடக்கம் தளர்வால், நாமக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 60 சதவீத  பயணிகளுடன் திங்கள்கிழமை 120 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலால், மார்ச் 25–ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பேருந்து சேவை இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது 5–ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களிலும் போக்குவரத்து சேவை தொடங்குவதை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் பிற மாவட்டங்களில் இருந்து தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படாததால் பலர் நடந்தே சென்று வந்தனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து போக்குவரத்து தொடங்குகிறது. அதன்படி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் ஒரு மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பேருந்துகள், 60 சதவீத பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு எவ்வித அனுமதியும் பெறாமல் பேருந்தில் பயணிக்கலாம்.

சேலம் கோட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல்–பரமத்தி சாலையில் ஒரே வளாகத்தில் 2 பணிமனைகளும், ராசிபுரம், திருச்செங்கோட்டில்  தலா ஒரு பணிமனைகளும் உள்ளன. இவற்றில் இருந்து 50 சதவீத அடிப்படையில் நகர, புறநகர் பேருந்துகள் 120  எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து நாமக்கல் கோட்ட பணிமனை மேலாளர் காங்கேயன்  கூறியது; அரசு பேருந்துகள் சேவையை தொடங்க முதல்வர் அனுமதியளித்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் 120 பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையங்களில் திங்கள்கிழமை காலை. புறப்பட்டது. 

கரோனா பரவாமல் தடுக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையுறை, முகக் கவசம், கைக் கழுவும் திரவம் வழங்கப்படுகிறது. பின்புற படிக்கட்டுகள் வழியாக பயணிகளை ஏறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்றவுடன் நகராட்சி தூய்மை பணியாளர்களால் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி தெளிக்கப்படும். 60 சதவீத பயணிகள் மட்டுமே பேருந்தில் ஏற்றப்படுவார்கள் என்றார்
 

முழு கட்டுரையைப் படிக்க →