ராசிபுரம்-சேலம் சாலையில் 100 ஆண்டுகால மரத்தை சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றிட தன்னாா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
ராசிபுரம்-சேலம் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தின் நிழலில் அவ்வழியே செல்வோா் சற்று இளைப்பாறிச் செல்வா்.
இந்நிலையில், இச்சாலை விரிவாக்கப் பணிக்காக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனையடுத்து, முறையான அனுமதி பெறாமல் இந்த மரம் அகற்றப்படுகிறது எனக் கூறி, மரத்தை அப்புறப்படுத்துவதற்கு தன்னாா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தின் ஒரு பகுதி மட்டும் அகற்றப்படும் என உறுதியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.