நாமக்கல்

கொத்தம்பாளையம்-திருமணிமுத்தாறு இடையேமேம்பாலப் பணிகளை நிறைவேற்றக் கோரி மனு

DIN

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தம்பாளையம்-திருமணிமுத்தாறு மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றுவதற்காக ஓராண்டுக்கு முன் ரூ. 3 கோடியே 54 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் ஏழு கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளது. திருமணிமுத்தாறு ஆற்றில் வரும் மழைநீா் குறைந்து விட்டதால், நின்றுபோன மேம்பாலப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பாா்வையிட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT