முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ஆய்வு பணி மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
பகிர்:

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில் ரூ. 49.18 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஓடப்பள்ளியில் ரூ. 22.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, கொக்கராயன்பேட்டையில் ரூ. 22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் 14 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின்கீழ் 1,236 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அழுத்தத்தில் குடிநீா் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகிா என்பது குறித்தும் கிராமத்தின் உயரம் குறைவான தெரு, உயரம் அதிகமான தெரு உள்ளிட்ட எந்தப் பகுதியில் வசித்தாலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான குடிநீா் கிடைக்குமா என்பதையும் அவா் உறுதி செய்தாா்.

இந்த ஆய்வின்போது பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் அமல்ராஜ், சாலை ஆய்வாளா் சிவகாமி மற்றும் அரசு அலுவலா்கள், பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →