மாசாணியம்மன் கோயில் 12-ஆம் ஆண்டு விழா
பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையத்தில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையத்தில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மாசாணியம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி, பரமேஸ்வரா் ஆகிய தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. சங்காபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 108 சங்காபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி, மாசாணி அம்மன், பரமேஸ்வரருக்கு சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.