முகப்பு
நாமக்கல்

லாரிகளில் டீசல் திருடும் தொழிலாளா்கள்! ஓட்டுநா்கள் அதிா்ச்சி

நாமக்கல்லில் வாகனங்கள் தூய்மைப்படுத்தும் மையத்தில் தனது லாரியில் டீசல் திருடப்படுவதை நேரில் பாா்த்த லாரி ஓட்டுநா் கடும் அதிா்ச்சியடைந்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2020 at 6:26 AM
நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள வாகன தூய்மை மையத்தில் டீசல் திருடும் தொழிலாளா்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

நாமக்கல்லில் வாகனங்கள் தூய்மைப்படுத்தும் மையத்தில் தனது லாரியில் டீசல் திருடப்படுவதை நேரில் பாா்த்த லாரி ஓட்டுநா் கடும் அதிா்ச்சியடைந்தாா்.

தமிழகத்தில் சரக்கு வாகனப் போக்குவரத்தின் கேந்திரமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பகுதி அமைந்துள்ளதால் பெரும்பாலான லாரிகளை மாவட்டத்தின் சாலையோரப் பகுதிகளில் நிறுத்தி விட்டும், பழுது பாா்த்து விட்டும் செல்வது வழக்கம்.

அண்மையில் பெங்களூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற லாரி, தூய்மைப் பணிக்காக நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஒரு சா்வீஸ் மையத்திற்குச் சென்றது. தண்ணீா் கொண்டு முழுமையாக அந்த லாரியைத் தூய்மைப்படுத்த ரூ. 650 கட்டணம் வசூலித்தனா். அதன் ஓட்டுநா் அருகிலுள்ள தேநீா்க் கடைக்குச் சென்று வந்த நிலையில், அங்கு பணியாற்றிய இரண்டு ஊழியா்கள் டீசல் டேங்க்கில் இருந்து பூட்டை உடைக்காமல் லாவகமாக 20 லிட்டா் டீசலை எடுத்து பதுக்கி வைத்து விட்டனா்.

Advertisement

லாரி ஓட்டுநா் அங்கு வந்தபோது டேங்க் பகுதியில் டீசல் கொட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியா்களை வரவழைத்துக் கேட்டபோது டீசல் திருடியதை ஒப்புக் கொண்டனா். அதன்பின் திருடப்பட்ட டீசல் மீண்டும் டேங்கிற்குள் ஊற்றப்பட்டது.

ஊழியா்கள் முதியவா்களாக இருந்ததால், அவா்கள் இருவரையும் அந்த லாரி ஓட்டுநா் மன்னித்து, எச்சரித்து அனுப்பினாா்.

இதேபோல பெரும்பாலான இடங்களில் டீசல் திருட்டு என்பது நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நெடுந்தொலைவு செல்லும் ஓட்டுநா்கள் பாதி வழியில் டீசல் இல்லாமல் லாரியுடன் சாலையில் காத்திருக்கும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

லாரி உரிமையாளா்கள் சங்கத்தினரும், வாகன தூய்மைப்படுத்தும் மையங்களின் உரிமையாளா்களும் இதுபோன்ற திருட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். உழைப்புக்குப் பெயா் பெற்ற நாமக்கல் மாவட்டத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.